Saturday, October 23, 2010

உலக வெப்பமயமாதல்....


"நினைத்து பார்"
காட்டமற்ற இயற்கை அன்னையின் இன்முகத்தை....
காலம் தவறாத காலநிலை மாற்றம்....
எங்கு காணினும் பச்சைபசேல் தோற்றம்....
நெடுந்துயர்ந்த பனிமலை கூட்டம்....

இன்றோ...
கரியமிலத்தை கக்கும் கார்களும்.,
அதற்கு தோள்கொடுக்கும் தொழிற்சாலைகளும்...
எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற 
போட்டியில் வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும்....
வெப்பக்காரணிகளை பட்டவர்த்தனமாய் பரிமளித்து கொண்டிருக்க....

இதோ 
காட்டிவிட்டாள் இயற்கையன்னை தன் கோரமுகத்தை.....
குடிமூழ்கும்  குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்த 
தொடர்ந்து உருகும் பனிமலையாய்.....
மனிதனின் உளபாட்டை உலுக்க...
ஓசோன் குடையில் ஓட்டையாய்..........
மும்மாரி தவறி பெய்யும் குறைந்த அளவு
மழையும் அமில மழையாய்..........
ஆங்காங்கே வெடித்து சிதறும் எரிமலைகள்
இயற்கையன்னையின்  தணிக்க இயலா வெம்மையின் வெளிப்பாடாய்......

இந்த "உலகவெப்பமயமாதல்" தொடங்கிவிட்டது உலகமயானமயமாதலை...................





No comments:

Post a Comment