Sunday, June 26, 2011

"காதல்" என்பது...

அவளை  பார்க்கும் ஆண்கள் , அவள்  பார்க்கும் ஆண்கள் மீது ஏனோ காழ்ப்புணர்வு...
இதுதான் காதலோ??...

என்றும் பார்த்தேயிராத என் பக்கத்துத் தெருநாய் அன்று ஏனோ அழகென்று கொஞ்ச தூண்டியது...
இதுதான் காதலோ???

சாலையில் அவள் செல்லும்போது ஏதோ அவளுக்காகத்தான் இந்த சாலை எண்ண தோன்றியது...
இதுதான் காதலோ??

சுட்டுப் போட்டாலும் வராத செந்தமிழுடன் ஏனோ கவிதை என்ற பெயரில் தள்ளுமுள்ளு..
இதுதான் காதலோ???

வறுகடலை வாங்கிய காகிதத்தில் அவள் பெயர் இருந்தால்கூட  அதையும் பத்திரப்படுத்த தூண்டும் மனது...
இதுதான் காதலா???

படிக்கும் புத்தகத்தில்கூட   அவள் முகம் தெரிவதாய் நண்பர்களுடன் அங்கலாய்க்கும் மனது...
இதுதான் காதலோ??

இவை அனைத்தும் சேர்ந்து விடிந்தது  எனது கடைசி தேர்வில் மதிப்பெண்ணாய்...
ஓஹோ புரிந்தது "இதுதான் காதல்"....

-சேபி-




No comments:

Post a Comment