Thursday, March 31, 2011


கருணாநிதி.........
தாய் தமிழ் காவலர்....தமிழன்னைக்கு விழா கண்ட  பெருமகனார்.....செந்தமிழின் மூத்த மகன்.... என்று கடைத்தமிழன்வரை அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவர் இவர்...ஆனால் கோவையில் இவர் செந்தமிழ் விழா நடத்திய விதம் இவரது தமிழ்ப்பற்றை உலகம் முழுதும் பறைசாற்றி உள்ளது (????).....  மொழிக்கான விழாவாக இது நடந்தாக தெரியவில்லை ஏதோ கட்சி மாநாடு என்றே அனைவரையும் நினைக்க வைத்தது ....இதில் அவரது முகத்திரை கிழிந்ததால் இனி மொழிப்பற்றை வைத்து தமிழனை ஏமாற்ற இயலாது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ இப்பொழுது இனப்பற்றை அதாவது ஆரிய - திராவிட வேறுபாட்டை கூறி தமிழனை மழுமட்டையாக்க பார்க்கிறார்...
இதனை நெல்லைக்கண்ணன் வாயிலாக இங்கு காண்போம்....
சமீபத்தில்... "தேர்தல் கமிஷன் ஆரியர்களை அரியணையில் ஏற்றி வைக்க முயலுகிறது" எனக்கூறியுள்ளார் கருணாநிதி...
M-Karunanidhi
அவரது வீட்டில் ஒரு தங்க நாதஸ்வரம், அவர் தந்தையாரிடம் இருந்தது என்று அவரே சொல்லிருக்கிறார். ஆனால் இன்றோ " நான் ஒரு சாமானியன் " என்று மீண்டும் திருச்சியில் பிதற்றியுள்ளார்......
            "ராஜா ஒரு தலித் என்பதால் தான் இத்தனை குதிக்கின்றனர்; டி.டி.கே.,ஆச்சாரியார் (இதே போல் பிரச்சனையில் சிக்கியவர்) அவரை விட்டுவிட்டனர்" என வேலூரில் கருணாநிதி புலம்பியுள்ளார்.அந்த ஆச்சாரியாரின் தாயார் ஸ்ரீரங்கத்தில் மரணமடைந்தார். கிரிஷ்ணமாச்சாரி வந்த தாயின் சடலத்தின் அருகில் ஒரு பத்து நிமிடம் இருந்துவிட்டு, தனது குடியிருப்புக்கு சென்றுவிட்டார்.உறவினர்கள் அவரிடம் போய்  ஈமச்சடங்கு செய்ய அழைத்தனர். பூணூல் போட்டுக்கொள்ளாத  டி.டி.கே., வேறு யாரையாவது வைத்துத் தாய்க்கு ஈமச்சடங்குகளை செய்ய சொன்னவர்,,
       அது சரி! தலித் ராஜாவை திகாருக்கு அனுப்பிவிட்டு தன் குடும்பத்தை மட்டும் காப்பாற்றியுள்ளார்  கருணாநிதி. ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்கோ மரணமடைந்துவிட்டார்....
        ஆரியர் சோழவந்தான்  சுப்பரமணியசாமி சொன்னார்," ராஜாவின் உயிரை காப்பாற்றுங்கள்" என்று. நல்லவேளை சி.பி.ஐ காப்பாற்றி விட்டது.
         கருணாநிதிக்கு சில கேள்விகள்.. 1967 ல் கூட்டணித் தந்திரத்தைக் கற்றுத்தந்த ராஜாஜி, உங்கள் கூற்றுப்படி ஆரியர்தானே...கடந்த 1971 ல் அவசர அவசரமா ஓராண்டுக்கு முன்பே சட்டசபையை கலைத்துவிட்டு, இந்திரா தலைமையில் தேர்தலை சந்தித்தீரே. அந்த இந்திரா காஷ்மீரத்து பார்ப்பன பெண்தானே..
       கடந்த 1977 ல் தனியே நின்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு,கடந்த 1980 ல் லோக்சபா தேர்தலில் அரக்கி என்று இந்திராவை வர்ணித்த தாங்கள், "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று அழைத்தீர்கள்.அப்போதும் அவர் உங்கள் மொழியில் ஆரியர்தானே..
      இன்று., கூட்டணியை உறுதி செய்து தந்திருக்கும் பிரணாப் முகர்ஜியும் ஆரியர்தானே....
       நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி, இன்று ஒரு செய்தி தந்திருக்கிறார். நீங்கள் கடனில் தவித்த நேரம் MGR.,ஜெயலலிதா இருவரும் ,"எங்கள் தங்கம்" படத்தில் இலவசமாக நடித்துத் தந்து உங்கள் கடனையெல்லாம் அடைக்க உதவினர் என்கிறாரே. அந்த ஜெயலலிதா உங்கள் மொழியில் ஆரியர்தானே...  
புரியவில்லை..
               தேர்தல் கமிஷனை, பொதுவுடைமை இயக்கங்கள்தான் விமர்சிக்கும். அவர்கள் ஆதிக்கம் உள்ள கேரளா,மேற்கு வங்கம் மாநிலங்களில் கூட தேர்தல் நடக்கிறது. அவர்கள்தேர்தல் கமிஷனை ஒன்றும் சொல்லவில்லை. தி.மு.க.வின் மத்திய அமைச்சர் பாலு, காவல் துறை நண்பர்களைத் திட்டுகிறார். பயம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது.
              கேரளாவில் இரண்டு பக்கமும் கோடிக் கொள்ளைகள் இல்லை. மேற்குவங்கத்திலும் இதுதான் நிலைமை. இங்கோ, மதுரையில் மட்டும் பலகோடி பிடிபட்டிருகிறதே. தமிழகத்தில் கூட ஒரு கட்சியும் குறை கூறாதபோது, நீங்கள் மட்டும்  ஆரியர் என்று ஆரம்பித்துவிட்டீரே.. பேரன்கள் ஆரிய குலப் பெண்களைத் திருமணம் செய்யும் அதைத் தடுக்காத தாங்கள். இப்போது ஆரியர் எனக்கூறுவது சிரிப்பை வரவழைக்காதா????

                                                                                    -சேபி-
       

No comments:

Post a Comment